
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நம் விருப்பத்திற்கேற்ப எல்லாம் நடப்பது இல்லை. கடவுளின் விருப்பமே எந்த விஷயத்திலும் இறுதியானது.
* அறியாமையில் சிக்கினால் மனம் தடுமாறும். விழிப்புடன் செயல்பட்டால் மனதை வெல்லலாம்.
* மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாகி விடும்.
* உள்ளத்தில் நேர்மையும், செயலில் துணிவும் இருந்தால் வானம் கூட ஒருவனுக்கு வசப்படும்.
* செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம். சோம்பல் ஒன்றே மிக இழிவானது.
- பாரதியார்